May 21, 2019 தண்டோரா குழு
கோவையில் 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை காந்திபுரம் ராம்நகர் பகுதியை சேர்ந்த ராதா என்ற சிறுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மதியழகனின் ஆட்டோவில் சிறுமி பள்ளிக்கு சென்றுவருவது வழக்கம். சிறுமியின் பெற்றோர் வீட்டை மாற்றி கோவை குனியமுத்தூர் குளத்துபாளையம் பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில்,மதியழகன் தொடர்ந்து சிறுமியை பார்பதற்காக குளத்துபாளையம் வந்து சென்றுள்ளார்.
நான்கு நாட்களுக்குமுன் மதியழகன் சிறுமியை கடத்தி சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் குணியமுத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து மதியழகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார்கள்.