• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 11 ,12 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவக்கம்

October 14, 2020 தண்டோரா குழு

கோவையில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. ஒரு பாடத்தில் தோல்வியடைந்தோருக்கு ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் பள்ளியில் வந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மட்டும் 11 மற்றும் 12 வகுப்புகளை சேர்ந்த 36 ஆயிரத்து 293 மாணவ மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் வந்துள்ளதாகவும், அந்த சான்றிதழ் மாணவர்கள் எழுதிய பள்ளி வாயிலாக கொடுக்கப்பட்டு வருகிறது.கொரோனா காலக்கட்டம் என்பதால் 1 மணி நேரத்திற்கு 30 பேர் என்ற வீதம் கொடுக்கப்பட்டு வருவதாகும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க