• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 100% வாக்களிக்க வலியுறுத்தி ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

April 16, 2019 தண்டோரா குழு

கோவையில் 100% வாக்களிக்க வலியுறுத்தி கோவை சறுக்கு விளையாட்டு பெற்றோர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி , கோவை சறுக்கு விளையாட்டு பெற்றோர்கள் சங்கம் , TRSSA, FRSI, ASSA, RARS ஆகிய ஸ்கேட்டிங் அகடாமிகளை சார்ந்த பயிற்சியாளர்கள், மற்றும் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், அவர்களது பெற்றோர்கள் என அனைவரும் இணைந்து ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

இப்பேரணி கோவை பந்தயச்சாலையில் நடைபெற்றது. இப்பேரணியை பெற்றோர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து துவக்கி வைத்தனர். இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் “100% வாக்களிப்போம்” “வாக்குரிமை நமது உரிமை ” “வாக்களிப்பது நமது கடமை” வாக்களிப்போம் ஜனநாயகம் காத்திடுவோம் ” போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாரும், முழக்கங்களை இட்டவாரும் பந்தயச்சாலையை சுற்றி வந்தனர்.

இறுதியில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டுமென்று உறுதிமொழி எடுத்து வலியுறுத்தினர்.

மேலும் படிக்க