• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

May 31, 2020 தண்டோரா குழு

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக் கோரி, கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகம் முன்பு, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முகக்கவசம் அணிந்தபடி தனி மனித இடைவெளி விட்டு நின்றபடி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மறுப்பதாகவும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 25 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க