March 13, 2019
தண்டோரா குழு
கோவையில் காவல் தெய்வமாக இருக்கும் ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவிலானது கோவையை காக்கும் காவல் தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலானது புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் ,என பல்வேறு பூஜைகள் ஒரு வார காலமாக நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு கோவிலிகளிலிருந்து தீர்த்தங்கள் எடுத்துவரப்பட்டு கோவில் கோபுரங்களை சுற்றியபடி கலசங்களுக்கு அருள் பாலிக்கும் விதமாக நீர் ஊற்றப்பட்டது .இந்த நன்னீராட்டு பெருவிழாவில் கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.