• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ குட்கா பறிமுதல்

July 29, 2020 தண்டோரா குழு

கோவை கவுண்டம்ளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை துடியலூர் போலிசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர் என்பவரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை கவுண்டம்பாளையம் அடுத்த டிரைவர் காலனி பகுதியில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைத்து விறபனை செய்வதாக துடியலூர் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு அங்கு சென்ற துடியலூர் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் டிரைவர் காலனி பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டை சோதனையிட்டனர்.

சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டுபிடித்தனர். வீட்டில் குட்கா போதை பொருட்களை பதுக்கி வைத்து பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வந்துதது தெரியவந்தது.

இதையடுத்து குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த துடியலூர் போலீசார் இது தொடர்ந்து குட்காவை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர் என்பவரை கைது செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

மேலும் படிக்க