• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் – 10 லிட்டர் சாராயம் பறிமுதல்

June 15, 2021 தண்டோரா குழு

கோவை, ஆலாந்துறை அருகே ஒரு வீட்டில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,
ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மது விலக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது,போளுவாம்பட்டி சேர்ந்த சம்பத்குமார், 38 என்பவர், வீட்டை வாடகைக்கு எடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதற்காக வைத்திருந்த, 1,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்,10 லிட்டர் கள்ளச்சாராயம், ஒரு ஸ்கார்பியோ கார்,காஸ் ஸ்டவ்,2 சிலிண்டர், 210 கிலோ நாட்டு சக்கரை,ஒரு கிலோ கடுக்காய்,ஒரு கிலோ ஜாதிக்காய்,ஒரு கிலோ அதிமதுரம், 90 காலி வாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து,சம்பத் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க