• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட உள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

September 7, 2020 தண்டோரா குழு

கோவையில் வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட உள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

கோவை மாநகராட்சி பகுதிகளில் #COVID19 தொற்றை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்பட உள்ளது.நோய் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 60 குழுக்களால் காலை, மாலை என இரு வேளைகளில் தினமும் 120 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பரிசோதனைகளை தீவிரப்படுத்த 1,800 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நாள்தோறும் ஒருவர் 50 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.முதற்கட்டம் முடிந்தபின் மீண்டும் முதல் வீட்டிலிருந்து ஆய்வுகள் தொடங்கும்.நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகள் & #COVID19 சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.அறிகுறி இல்லாமல் நோய் பாதிக்கப்பட்டோர் அரசின் வழிமுறைகளை பின்பற்றி 14 நாட்களுக்கு தேவையான மருந்துகளோடு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க