• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீடுகளில் வான வேடிக்கையுடன் நடனமாடி புத்தாண்டை வரவேற்று கொண்டாடிய மக்கள்

December 31, 2020 தண்டோரா குழு

கோவையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கோவையில் வீடுகளில் மக்கள் வான வேடிக்கை நடனமாடியும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவையில் அவினாசி சாலை, பந்தய சாலை, வா வு சி பூங்கா போன்ற பகுதிகள் வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மாநகரம் முழுவதும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டமின்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருந்த போதும் 2021 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்க வீடுகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வான வேடிக்கையுடன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி நடனமாடியும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

மேலும் படிக்க