• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விபத்துக்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை 57 % ஆக குறைவு

August 25, 2020 தண்டோரா குழு

கோவையில் சாலை விபத்துக்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 57 சதவீதம் குறைந்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

கோவை மாநகரில் கடந்த ஆண்டு மொத்தம் 621 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை மொத்தமாக 362 விபத்து வழக்குகள் மட்டும் பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 42 சதவீதம் குறைவு. கடந்தாண்டு சாலை விபத்துக்களில் சிக்கி 75 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு ஆக்ஸ்ட் 23ம் தேதி வரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.இது கடந்தாண்டை காட்டிலும் 57 சதவீதம் குறைவு.

மேலும், இந்தாண்டு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 4 லட்சத்து 48 ஆயிரத்து 520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இது கடந்தாண்டை காட்டிலும் 162 சதவீதம் அதிகம்.அதேபோல்,மது போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மொத்தம் 89 ஆயிரத்து 392 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இது கடந்தாண்டை காட்டிலும் 190 சதவீதம் அதிகம் ஆகும்.

இவ்வாறு சுமித்சரண் கூறினார்.

மேலும் படிக்க