• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வித்தியாமான ஆடையை அணிந்து சமூக ஆர்வலர் விழிப்புணர்வு பிரச்சாரம்

April 5, 2019 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வாக்குரிமையை வலியுறுத்தும் வாசகங்கள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோவையை சேர்ந்தவர் ராஜா சேதுமுரளி. இவர் பசியாற சோறு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். பல்வேறு விழிப்புணர்வு நிகழச்சிகளில் அவ்வப்பொழுது ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வருவதை அடுத்து, அனைவரும் ஒட்டு போட வேண்டும் என வலியுறுத்தி, அதனை வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்து வந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஓட்டுரிமை ஜனநாயகத்தின் கடைமை என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இதுபோன்ற நூதனமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினார். வித்தியாமான ஆடையை அணிந்து சென்றதால் பொதுமக்கள் ஏராளமானோர் இவரை ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

மேலும் படிக்க