April 5, 2019 தண்டோரா குழு
கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வாக்குரிமையை வலியுறுத்தும் வாசகங்கள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கோவையை சேர்ந்தவர் ராஜா சேதுமுரளி. இவர் பசியாற சோறு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். பல்வேறு விழிப்புணர்வு நிகழச்சிகளில் அவ்வப்பொழுது ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வருவதை அடுத்து, அனைவரும் ஒட்டு போட வேண்டும் என வலியுறுத்தி, அதனை வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்து வந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஓட்டுரிமை ஜனநாயகத்தின் கடைமை என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இதுபோன்ற நூதனமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினார். வித்தியாமான ஆடையை அணிந்து சென்றதால் பொதுமக்கள் ஏராளமானோர் இவரை ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.