• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வித்தியாமான ஆடையை அணிந்து சமூக ஆர்வலர் விழிப்புணர்வு பிரச்சாரம்

April 5, 2019 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வாக்குரிமையை வலியுறுத்தும் வாசகங்கள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோவையை சேர்ந்தவர் ராஜா சேதுமுரளி. இவர் பசியாற சோறு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். பல்வேறு விழிப்புணர்வு நிகழச்சிகளில் அவ்வப்பொழுது ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வருவதை அடுத்து, அனைவரும் ஒட்டு போட வேண்டும் என வலியுறுத்தி, அதனை வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்து வந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஓட்டுரிமை ஜனநாயகத்தின் கடைமை என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இதுபோன்ற நூதனமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினார். வித்தியாமான ஆடையை அணிந்து சென்றதால் பொதுமக்கள் ஏராளமானோர் இவரை ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

மேலும் படிக்க