• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வாயில் காயம்பட்டு சுற்றிவந்த மக்னா யானை இன்று அதிகாலை உயிரிழந்தது

September 9, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மனித-யானை மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு தந்ததுக்காக வெட்டிக் கொல்லப்பட்டது ஒரு யானை. அதற்கு முன்பு வெடிமருந்தை சாப்பிட்டு வாயில் காயத்துடன் இறந்து போனது கேரளாவில் ஒரு யானை. அதேபோல கோவையில், உடல் காயமடைந்து எழுந்திரிக்க முடியாமல் இறந்து போனது.

அந்தவகையில் தற்போது அவுட்டுக்காய் என்னும் வெடியை சாப்பிட்டு நாக்கு சேதமாகி கடந்த ஒரு மாத காலமாக வலியுடன் சுற்றி வந்தது ஒரு மக்னா யானை. இதற்கு மருந்து அளித்து காப்பாற்ற தமிழக , கேரள வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால், முயற்சி பலனளிக்காததால் நேற்று கைவிரித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கோயம்புத்தூர் மாவட்டம் சோலையூர் அருகிலுள்ள மரப்பாலம் பகுதியில் இந்த மக்னா யானை உயிரிழந்து கிடந்தது.

மேலும் படிக்க