• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வாக்களிக்க சென்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி உயிரிழப்பு

April 18, 2019 தண்டோரா குழு

கோவையில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில் கோவை காந்தி மாநகர் வின்சென்ட் பள்ளியில் வாக்கு அளிக்க ஒய்வு பெற்ற அரசு அதிகாரியான பாலகிருஷ்ணன் என்பவர் இன்று காலை 9 மணியளவில் சென்றுள்ளார்.

வாக்கு சாவடி மையத்தில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த போது, மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, ஏற்கனவே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க