• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு முன்பாக சாலை மறியல்

September 7, 2017 தண்டோரா குழு

மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வளாகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த மனவிரக்தியில், அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க கோரி, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு,வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டவாறு ஊர்வலமாக வந்து நீதிமன்ற வளாகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கல்வியை பொது பட்டியலில் இருந்து விடுவித்து , மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறித்தப்பட்டது.

சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாளை இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் படிக்க