• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு முன்பாக சாலை மறியல்

September 7, 2017 தண்டோரா குழு

மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வளாகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த மனவிரக்தியில், அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க கோரி, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு,வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டவாறு ஊர்வலமாக வந்து நீதிமன்ற வளாகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கல்வியை பொது பட்டியலில் இருந்து விடுவித்து , மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறித்தப்பட்டது.

சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாளை இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் படிக்க