• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வரும் 15ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவிப்பு

December 9, 2020 தண்டோரா குழு

மூலப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், இதற்காக கோவையில் வரும் 15ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் (போசியா) கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் கூறுகையில்,

தொழில் சார்ந்த நெருக்கடிகளை கோவை மாவட்டம் சந்தித்து வருவதாகவும்,குறிப்பாக மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கொரோனா அச்சுறுத்தல் முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தொழில் நடத்த முற்பட்டபோது எந்தவித முகாந்தரமும் இல்லாமல் மூலப்பொருட்கள் விலை 20 முதல் 40 சதவீதம் விலையேற்றமடைந்துள்ளது.இதனால், பொதுத்துறை மற்றும் தனியாரிடம் ஒரு குறிப்பிட்ட விலைக்கு ஆர்டர் எடுத்த தொழிலகங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தார்தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இல்லை. விலையேற்றத்தை கட்டுப்படுத்த கண்காணிப்பு கமிட்டி அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் விலை நிர்ணயித்திருப்பது போல் அதிகபட்ச விலையையும் நிர்ணயிக்க வேண்டும். சிறு-குறு தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அரசே இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டும்.
அரசுக்கு வருவாய் மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பை சிறு குறு தொழில் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதனை கோரிக்கையாக பிரதமருக்கும், துறை அமைச்சர்களுக்கும் அளித்துள்ளோம்.

இந்நிலையில்,எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த செய்தியாளர் சந்திப்பில் டேக்ட், கொசிமா, கௌமா, கிதா, கன்சியா, கோசியா உள்ளிட்ட 19 தொழில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க