• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வரும் திங்கட்கிழமை முதல் மார்கெட் மற்றும் மளிகை கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு

June 20, 2020 தண்டோரா குழு

கோவையில் வரும் திங்கள் முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வணிகர் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

கொரானா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நகரில் உள்ள 7 வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையிலும் வெகு வேகமாகப்பரவி வருகிறது. இத்தொற்றிலிருந்து நம்மையும் கடை பணியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பதின் ஒரு பகுதியாக நம் வியாபார நிறுவனங்களை வரும் திங்கட்கிழமை முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என அவசர முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க