• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வனத்துறை உழியர்களுக்கு யோக பயிற்சி

March 28, 2018 தண்டோரா குழு

கோவையில் வனத்துறை உழியர்களுக்கு ஒரு நாள் யோக பயிற்சி இன்று(மார்ச் 28)நடைபெற்றது.

வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணி சுமை காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.காவல்துறையினர் போலவே வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்களும் இரவு பகலாக பணியாற்றுவதால் கடுமையான பணி சுமையை எதிர்கொள்கின்றனர்.

இதனையடுத்து கோவையில் மண்டலத்தில் பணியாற்றும் வனச்சரகர்கள், வனவர்கள்,வனக்காப்பாளர்கள்,வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோருக்கு ஒரு நாள் யோகா பயிற்சி இன்று நடைபெற்றது.

வடகோவையில் உள்ள வனத்துறை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில் பணிச்சுமையில் உள்ள தங்களுக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும்,இது போன்று அடிக்கடி நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க