January 29, 2019 தண்டோரா குழு
சென்னை லயோலா கல்லூரியில் இந்து தர்மத்தை, இந்து கலாச்சாரத்தை பாரத மாதாவை அவமானப்படுத்தக்கூடிய செயலைக்கண்டித்து கோவையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை லயோலா கல்லூரியில் இந்து கலாச்சாரத்தை மற்றும் பாரத மாதாவை இழிவுபடுத்திய கல்லூரி நிர்வாகம் அங்கே புகைப்பட கண்காட்சி என்ற பெயரில் அவமானபடுத்தியுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் மோசமாக உள்ளதா? அந்த கல்லூரி நிர்வாகத்தினரை அரசு தலையிட்டு கைது செய்து கல்லூரியை மூட வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில அமைப்பு செயலாளர் கு௫ஜி செந்தில்குமார், பொ௫ளாளர் சண்முகராஜன்,கார்த்திக்சுவாமிகள்,பார்த்திபன்,கணேசன், மோகனராசு உள்ளிட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.