• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரூ.238 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் – முதல்வர் பழனிசாமி !

June 25, 2020 தண்டோரா குழு

கோவையில் ரூ.238 கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழக முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான அத்திக்கடவு – அவிநாசி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கு கோவை வந்தார்.இதனைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல்
நாட்டினார்.மேலும்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரியகுளத்தில் ரூ.39.74 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும், வாலாங்குளத்தில்
ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவையும் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.மேலும், அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம், ஆனைமலை, பொள்ளாச்சி வட்டாரங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும், செட்டிப்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி,வி.பி. கந்தசாமி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு,மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத்,மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க