• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

April 19, 2021 தண்டோரா குழு

கோவை இருகூர் அருகே இன்று அதிகாலை காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இருகூர் அருகே இன்று அதிகாலை 4:30 மணி அளவில் தண்டவாளம் அருகே பொதுமக்கள் சிலர் சென்றுகொண்டிருந்தபோது
அப்போது உடல்கள் சிதறிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் ஜோடிகள் இன்று அதிகாலை இருகூர் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு வந்த
போலீசார் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க