• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரயில்வே வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

September 15, 2020 தண்டோரா குழு

இரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் கோவை ரயில்வே பணிமனையில் வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிவிட்டர் மூலமாக தேசத்தை காப்போம்,ரயில்வே துறையை காப்போம் என்ற வாசகத்துடன் ரயில்வே அமைச்சருக்கு செய்தி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் கோவை கூட்செட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிபனையில் எஸ்.ஆர்.எம்.யூ மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழிற்சங்கத்தினர் டி.ஏ முடக்கப்பட்டதை வாபஸ் பெற வேண்டும், ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவது, ரயில் ஓட்டுநர் (லோகோ பைலெட்) தனியார் மூலம் தேர்ந்தெடுப்பது, 50 % பணிகளை தனியாருக்கு வழங்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முகக்கவசம், சமூக இடைவெளியுடன் நடந்த போராட்டத்தின் போது பேசிய நிர்வாகிகள் மத்திய அரசு தனியார் மயக்கொள்கையை கைவிடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க