• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரம்ஜான் பண்டிகை வீடுகளிலேயே எளிமையாக கொண்டாட்டம்

May 14, 2021 தண்டோரா குழு

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவையில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே, ரம்ஜான் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர்.

இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான், பக்ரீத் முக்கிய பண்டிகைகளாக கொண்டாடப்படுகிறது. இதில், ஆண்டின் மற்ற மாதங்களைக் விட, ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே சிறந்த மாதமாக இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். இந்த மாதம் இறைவனை நெருங்கவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் கருதுகின்றனர்.

இதையொட்டி, ஒரு மாதம் நோன்பு இருந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், கோவை சாயிபாபாகாலனி பகுதியில் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபீக் சார்பில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, காலையிலேயே அவரவர் தங்களது வீடுகளிலேயே தனிமனித இடைவெளியை பின்பற்றி, முகவசம் அணிந்தபடி தொழுகையில் ஈடுபட்டனர்.

சிலர், வீட்டின் வாசலிலும்,மொட்டை மாடிகளிலும் தனிமனித இடைவெளியை பின்பற்றி, குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.இந்த தொழுகையின் போது மக்களை கொரொனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.

மேலும் படிக்க