• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் – வெறிச்சோடிய மசூதிகள்

May 25, 2020 தண்டோரா குழு

ரமலான் பண்டிகையான இன்று
கோவையில் மசூதிகள் மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்பட்டது.

உலக முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி , இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில், சிறப்பு தொழுகை நடத்திட அரசு உத்தரவிட்டிருந்தது. வழக்கமாக, ரமலான் பண்டிகை நாளில் மசூதிகளிலும், மைதானத்திலும் அதிகளவில் கூட்டம் காணப்படும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மசூதிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில்,ரமலான் பண்டிகையான இன்று கோவையில் உள்ள மசூதிகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரதலின் பெயரில் பள்ளி வாசல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க