• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மேலும் ஒரு காட்டு யானை உயிரிழப்பு

September 18, 2020 தண்டோரா குழு

கோவை அருகே மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயங்களுடன் வலம்வந்த காட்டு ஆண் யானை வியாழக்கிழமை மாலை உயிரிழந்தது.நடப்பாண்டில் கோவை வனப்பகுதியில் 20வது காட்டு யானை உயிரிழந்துள்ளது.

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை வனப் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை காலில் படுகாயத்துடன் சுற்றி திரிந்தது. இதனால் இந்த காட்டு யானைக்கு கும்கி யானைகள் மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறை திட்டமிட்டனர். இதனையடுத்து அந்த வனப்பகுதிக்கு 2 கும்கி யானைகள், மருத்துவர்கள் குழு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் காட்டு யானை திடீரென வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் வனப்பகுதியில் இருந்து அந்த யானையை சமவெளிக்குள் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வனப்பகுதியில் அந்த காட்டு யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. கோவை வனப்பகுதியில் இந்த ஆண்டில் 20வது யானைகள் உயிரிழந்துள்ளது.

இது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில்,

நெல்லித்துறை காப்புக் காட்டில் நேற்று மற்றும் இன்று தொடர்ந்து லேசான மழை பெய்ததால் யானை சேறான பகுதியில் வழுக்கி விழுந்ததாகவும், வழுக்கி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகவும்,மேலும் காலில் இருந்த காயம் காரணமாக எழுந்திருக்க முடியவில்லை என்று அங்கு உள்ள வன அலுவலகர்கள் தகவல் அளித்தனர். யானைக்கு காலில் ஏற்பட்ட காயம் தவிர அடி வயிற்றிலும் தோள்பட்டையிலும் வேறு ஒரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் யானை ஏற்கனவே இரண்டு இடங்களில் தந்தத்தினால் குத்தப்பட்டகாயங்களும் இருந்தன. வனதுறை முயற்சி செய்தும் பலன் இன்றி யானை இறந்து விட்டது பிரேத பரிசோதனைக்கு பிறகு முழுமையாக தெரியும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க