• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மூன்று காவலருக்கு கொரொனா தொற்று உறுதி

April 24, 2020 தண்டோரா குழு

கோவையில் மூன்று காவலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் 3000 காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக 544 காவல் துறையினருக்கு கொரொனா தொற்று இருக்கிறதா,இல்லையா,என பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 537 பேருக்கு தற்போது பரிசோதனை முடிவுகள் வரப்பட்டுள்ளது. அதில் அன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு பெண் காவலருக்கு ஏற்கனவே கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது மருத்துனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் கோவை போத்தனூரில் நேற்று பரிசோதனை செய்யப்பட்ட,இரண்டு பெண் காவலர்கள் உள்ளிட்ட மூன்று பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.மூன்று காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரின் சளி மாதிரிகள் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக கோவையில் கொரொனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மூன்று காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மற்ற காவலர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.

மேலும் படிக்க