• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மூடப்பட்டுள்ள செங்கல் சூளைகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 26, 2021 தண்டோரா குழு

கோவை சின்னதடாகம் பகுதிகளில் மூடப்பட்டுள்ள செங்கல் சூளைகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி,செங்கல் சார்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் அமைப்புகள் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையை அடுத்த துடியலூர், சின்னத்தடாகம், வீரபாண்டி,பன்னிமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன.இந்நிலையில் செங்கல் சூளைகள் பயன்பாட்டுக்கு அனுமதியின்றி மண் அள்ளுவது,சுற்றுச்சூழல் பாதிப்பு என கனிம வளத்துறைக்கு தொடர்ந்து புகார் வந்ததை தொடர்ந்து, செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது.இதனால் அங்கு பணியாற்றி வந்த பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செங்கல் சூளை தொழிலை மீட்டெடுக்க கோரி, கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் உட்பட செங்கல் உற்பத்தி சார்ந்த அமைப்புகள் சார்பாக கோவை சின்னத்தடாகம் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தடாகம் செங்கல் தொழில் நலச்சங்க அமைப்பாளர்கள் கோபிநாத், பரசுராமன், சுதாகர், பிரதீப் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,ஐநூறுக்கும் மேற்பட்டோர் செங்கல் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தும் பதாகைகளை தங்கள் கைகளில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் விறகு வியாபாரிகள் சங்க தலைவர் சிவகணேஷ், மளிகைக்கடை வியாபாரிகள் சங்கம் தலைவர் மயில்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கேசவமணி உட்பட 250க்கும் மேற்பட்ட செங்கல் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், விறகு வியாபாரிகள் பலர் கலந்துக்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக தடாகத்திலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்த்து குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க