• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மு.க ஸ்டாலினை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்

July 27, 2017 தண்டோரா குழு

சேலம் கச்சராயன்குட்டை ஏரியை பார்வையிட வந்த சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க ஸ்டாலினை போலீசார் தடுத்து நிறுத்தி கோவை கணியூர் சுங்கச்சாவடி அருகே கைது செய்தனர்.

இது குறித்து மு.கஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீட் தேர்வில் விலக்கு கோரி மனித சங்கிலி போராட்டம் தமிழகத்தில் நடக்க உள்ளது. இந்த போராட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் தமிழக அரசு செயல்படுகிறது.

சேலம் கட்சராயன்பாளையம் ஏரியை பொது மக்கள் பாராட்டும் வகையில் தி.மு.க.வினர் தூர் வாரினர். இன்று நடக்க இருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆணையை தான் அதிகாரிகள் என்னிடம் வழங்கினர். சேலம் ஏரியை பார்வையிட தடை செய்து ஆணை ஏதும் அவர்கள் வழங்கவில்லை. இந்த ஆணையை வழங்காவிட்டால், தடை மீறி சேலம் சென்று ஏரியை பார்வையிடுவேன்.

திமுக போராட்டம் நடத்தும் என்ற காரணத்தினால் தான் நீட் தேர்வு குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை சந்தித்தனர்,” என்றார்.

மேலும் படிக்க