• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 11 லட்சம் ரூபாய் பறிமுதல்

March 19, 2019 தண்டோரா குழு

கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இரு இடங்களில் 11 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து உள்ளனர்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 5 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். தனியார் நிறுவன ஊழியர்கள் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு வந்த போது வாகன சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்த தேர்தல் அதிகாரிகள், பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதே போல , கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை குழுவினரால் வாகன சோதனையின் போது உக்கடம் பைபாஸ் சுண்டக்காமுத்தூர் சாலை சந்திப்பு பாலக்காடு முதல் வாளையார் பேருந்தில் சுப்ரமணியன் என்பவரிடமிருந்து லாரி வாடகை வழங்குவதற்காக எவ்விதமான ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க