• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் !

December 3, 2021 தண்டோரா குழு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு முதுநிலை மருத்துவ மாணவர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வழக்கமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் செப்டம்பா் மாதம் தான் நீட் தோ்வு நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளன. அதனால், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை. நீட் தோ்வு எழுதிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனா்.

இந்த நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட மருத்துவ மனைகளில் மருத்துவர்களாக பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தற்போது கலந்தாய்வை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கோவையிலும் அரசு மருத்துமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இரண்டாவது நாளாக இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க