• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதியோர் தம்பதி மீட்பு : காப்பகத்தில் சேர்ப்பு

September 4, 2021 தண்டோரா குழு

கோவை அருகே செல்வபுரம் பகுதியில் பேரூர் செல்லும் சாலையில் ஆதரவற்ற முதியோர் தம்பதி சாலையோரத்தில் வசித்து வந்தனர். இவர்களின் பரிதாப நிலையைக் கண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் இவர்களுக்கு உதவ முன்வந்தனர். இவர்கள் குறித்த தகவலை அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர் .

பின்னர் கோவை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ரவி, சிவா, பழனிசாமி ஆகியோர் உதவியுடன் இந்த வயதான தம்பதியினர் அரசு அதிகாரிகள் உதவியுடன் மீட்கப்பட்டு ஆர்.எஸ் புரத்தில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சளி, காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டன.

இதில் அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்படவில்லை.இருப்பினும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர் யார் என்கிற விவரம் குறித்த விசாரணையும் காப்பக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க