• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் முதியோர் தம்பதி மீட்பு : காப்பகத்தில் சேர்ப்பு

September 4, 2021 தண்டோரா குழு

கோவை அருகே செல்வபுரம் பகுதியில் பேரூர் செல்லும் சாலையில் ஆதரவற்ற முதியோர் தம்பதி சாலையோரத்தில் வசித்து வந்தனர். இவர்களின் பரிதாப நிலையைக் கண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் இவர்களுக்கு உதவ முன்வந்தனர். இவர்கள் குறித்த தகவலை அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர் .

பின்னர் கோவை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ரவி, சிவா, பழனிசாமி ஆகியோர் உதவியுடன் இந்த வயதான தம்பதியினர் அரசு அதிகாரிகள் உதவியுடன் மீட்கப்பட்டு ஆர்.எஸ் புரத்தில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சளி, காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டன.

இதில் அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்படவில்லை.இருப்பினும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர் யார் என்கிற விவரம் குறித்த விசாரணையும் காப்பக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க