• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல் முறையாக “செட்டிநாடு திருவிழா” துவக்கம் !

January 7, 2023

கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் கோயம்புத்தூர் விழா 2023-ன் ஒரு பகுதியாக, நகரத்தார் தொழில்முனைவோர் சங்கம் (NEU) சார்பில் முதல் செட்டிநாடு திருவிழாவை, செட்டிநாடு குழும நிறுவனங்களின் தலைவர் முத்தையா தொடங்கி வைத்தார்.

கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் (டி ஹால்) இந்த மாபெரும் நிகழ்வு செட்டிநாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.செட்டிநாடு மக்களுக்கு அருளும் வகையில் 9 கோவில்களின் பிரதிகள் செய்யப்பட்டு கண்காட்சி அரங்கு வாசலில் காட்சிப்படுத்தப்பட்டது.

இங்கு காட்சிப்படுத்துவதற்கான செட்டி நாட்டிலிருந்து ஏராளமான பழங்கால பொருட்கள் கொண்டு வரப்பட்டு இருந்தது.செட்டிநாடு கட்டிடக்கலை, உணவு, கைவினைத்திறன், நகைகள், புடவைகள், பாரம்பரிய விளையாட்டுகள் போன்றவற்றை சிறப்பிக்கும் 80க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ ஜெயம் சாரீஸ் சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட வேகான் பருத்திப் புடவைகள் கவனத்தை ஈர்த்தது.அதே உணர்வுடன் பட்டு போன்ற புடவைகள் ஆனால் விலையில் 1/10 பங்கு ஆகும்.கையால் செய்யப்பட்ட ஓலை பைகள், கைத்தறி பருத்திப் புடவைகள், மர சமையலறை பாத்திரங்கள், எடை குறைந்த செட்டிநாடு காட்டன் சேலைகள், செட்டிநாடு சிற்றுண்டிகள், வாசனைப் பொருட்கள் மற்றும் நகைகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

இதற்கிடையில்,ராயல்டி பாஸ் வைத்திருப்பவர்கள் செட்டிநாடு உணவு சமைக்க,ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிக்க, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட,மற்றும் அனுபவமுள்ள சமையல் கலைஞர்களால் சமைத்த ஒரு வேளை (சைவம் அல்லது அசைவம்) போன்ற பல சலுகைகளை பெற முடியும்.இங்கு பொதுமக்கள் இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செட்டிநாடு திருவிழாவை கண்டுகளித்தனர்.

துவக்க விழாவில் பிரிக்கால் நிறுவனங்களின் தலைவர் வனிதா மோகன், கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ராமசாமி,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன்,குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வானவராயர்,மணிவண்ணன், கன்வீனர், நகரத்தார் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (NEU),ராமு, தலைவர், செட்டிநாடு திருவிழா 2023, முத்துராமன், உறுப்பினர், நகரத்தார் தொழில் முனைவோர் கூட்டமைப்பு மற்றும் நிர்வாக இயக்குனர், லட்சுமி செராமிக்ஸ், தொழில் முனைவோர் கூட்டமைப்பு கோ கன்வீனர் விஷ்ணு, உறுப்பினர்கள் சுப்பிரமணியம், அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க