• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முக கவசமின்றி செல்வோர்க்கு 100ரூபாய் அபராதம் விதிக்கும் பணி தீவிரம்

September 8, 2020 தண்டோரா குழு

கொரோனாவை கட்டுப்படுத்த கோவையில் முக கவசமின்றி செல்வோர்க்கு போலீசார் உதவியுடன் மாநகராட்சியினர் 100ரூபாய் அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதைத்தொடர்ந்து நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.விதிமுறைகள் மீறப்படுவதை குற்றமாக கருத வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக கவர்னர் பிறப்பித்து உள்ளார். வாயையும்,மூக்கையும் சேர்த்து மூடி முக கவசம் அணியாதவர்கள்,பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு, பொது இடங்கள் மற்றும் கூடுகைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனிநபருக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து கோவையில்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த காந்திபுரம் பகுதியில் முக கவசம் அணியாமல் நடந்து செல்வோர்,இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் முக கவசம் இன்றி செல்வோரை காட்டூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் மாநகராட்சியினர் தனி நபர்க்கு 100ரூபாய் என்று அபராதம் விதித்தனர்.மேலும் முக கவசமின்றி வருவோருக்கு போலீசார் முக கவசம் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதே போல் கோவையின் பல்வேறு பகுதியில் அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க