• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முகக்கவசம் அணியாமல் மக்கள் கூடும் பகுதிகளில் நடைப்பயிற்சி

May 27, 2020 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்திய நிலையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்குதல் சென்னையில் தொட்ர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கோவை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் முற்றிலுமாக குறைந்துள்ளது.தாக்கத்தை தடுப்பு வகையில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் வெளியே வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவையின் மையப்பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியில் மீண்டும் அப்பகுதி மக்கள் நடைபயணங்களை துவங்கி உள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் ஆபத்தான முறையில் பொது வெளிகளில் உலாவுகின்றனர்.மாவட்ட ஆட்சியர் கேம்ப் ஆபிஸ்,காவல் உயர் அதிகாரிகள், நீதிபதிகள் குடியிருப்புகள் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியிலேயே பொதுமக்கள் அரசு உத்தரவை மீறி செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க