• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முகக்கவசம் அணியாமல் மக்கள் கூடும் பகுதிகளில் நடைப்பயிற்சி

May 27, 2020 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்திய நிலையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்குதல் சென்னையில் தொட்ர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கோவை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் முற்றிலுமாக குறைந்துள்ளது.தாக்கத்தை தடுப்பு வகையில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் வெளியே வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவையின் மையப்பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியில் மீண்டும் அப்பகுதி மக்கள் நடைபயணங்களை துவங்கி உள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் ஆபத்தான முறையில் பொது வெளிகளில் உலாவுகின்றனர்.மாவட்ட ஆட்சியர் கேம்ப் ஆபிஸ்,காவல் உயர் அதிகாரிகள், நீதிபதிகள் குடியிருப்புகள் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியிலேயே பொதுமக்கள் அரசு உத்தரவை மீறி செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க