• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மீன்வளர்ப்பு கடையில் வைக்கப்பட்டிருந்த யானைகள் தந்தம் பறிமுதல்

December 23, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சாலையில் சண்முகபுரம் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் மீன்வளர்ப்பு கடையில் யானையின் தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றத்தடுப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவின் பெயரில் மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு குழுவினருடன் மீன்வளர்ப்பு கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானையின் இரண்டு தந்தங்களையும் பறிமுதல் செய்தனர் .விசாரணையில் கடையின் உரிமையாளர் உட்பட 6 பேர் இந்த தந்தங்களை விற்க முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து ஆறு நபர்களையும் பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க