• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரபடுமா? – அமைச்சர் எஸ்.பி வேலுமணி விளக்கம்

July 16, 2020 தண்டோரா குழு

கோவையில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுபாட்டில் இருக்கிறது. தடுப்பு பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். கொரோனா அறிகுறியை கண்டறிந்து சிகிச்சை அளிக்க மாவட்டத்தில் 5 ஆயிரம் காய்ச்சல் முகாம் நடத்தபட்டு வருகிறது. முதல்வரின் அறிவுரை படி கோவையில் கொரொனாவால் பாதிக்கப்படுவோருக்கு சித்த மருத்துவ சிகிச்சை முறை தொடங்கபட்டுள்ளது. யோகா மற்றும் மன அழுத்த குறைக்க கூடிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கோவையில் இதுவரை 80,620 பேருக்கு சோதனை செய்யபட்டுள்ளது. மொத்தம் 4813 படுக்கை வசதிகள் செய்யபட்டுள்ளது. கொரோனா குறித்த தகவல்களை அறிந்துகொள்ள கோவை கேர் என்ற செயலி தொடங்கபட்டுள்ளது.

மனித கழிவுகளை மனிதனே அகற்றுதல் தடுப்பு சட்டம் கோவை மாவட்டத்தில் 100 சதவிதம் அமல்படுத்தபட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 34 நகரங்களில் கழிவு நீர் அகற்றும் அதி நவீன எந்திரம் வழங்கபடும். கோவையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுபடுத்த புதிய நபர்கள் வருகை குறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். மாஸ்க் அணியாதோரிடம் பேச கூடாது. கொரோனா யாருக்கு வேண்டுமானாலும் வரும்.கொரோனவால் பாதிக்கபட்டோரை உதாசினம் செய்ய கூடாது என்றார்.

மேலும், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு கொண்டுவரபடுமா என செய்தியாளர் கேட்டதற்கு ஊரடங்கால் தொழில்கள் பாதிக்கும் என்றும் கோவையில் ஊரடங்கு கொண்டுவர தேவையில்லை என்றார். மேலும், மருத்துவ குழுவினரின் பரிந்துரை படி தான் ஊரடங்கை கொண்டு வர முடியும் என்ற கூறிய எஸ்.பி.வேலுமணி பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

மேலும் படிக்க