• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு ஆலோசனை மையம் துவக்கம்

September 1, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு,சுயதொழில் மற்றும் திறன் மேம்பாடு ஆலோசனை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவா் ஜி.எஸ்.சமீரன் அவா்கள் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் ஆட்சியர் சமீரன் பேசும்போது,.

தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுகென்று கடந்த வாரம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு 29 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,இன்றுமாவட்ட ஆட்சியார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு,சுயதொழில் மற்றும் திறன் மேம்பாடு ஆலோசனை மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்மையம் நிரந்தமாக செயல்படும்.இம்மையத்தின் மூலம் வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தகுதிகள் மற்றும் திறன்களுக்கு தகுந்தவாறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்.

மேலும், சுயதொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கிகளில் கடன்கள் பெறுவதற்கான வழிமுறைகள்; குறித்த ஆலோசனைகளும்;வழங்கப்படும். இதன்மூலம், மாற்றுத்திறனாளிகளும், சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு இணையாக பொருளாதார முன்னேற்றம் பெற்று வாழ்க்கையில் நல்ல நிலையினை அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க