• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மழை மக்கள் மகிழ்ச்சி

March 6, 2017 தண்டோரா குழு

கோவை, திருப்பூர், குமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் திங்கள் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததோடு கடுமையான வெப்பமும் நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக திடீரென மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் திருப்பூர் மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திங்கள் காலை முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க