• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மருத்துவ காப்பீட்டுக்கு திட்டத்தில் ஆதார் எண் இணைக்கும் பணிக்கு சிறப்பு முகாம்கள்

May 9, 2017 தண்டோரா குழு

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படாத பயனாளிகளை சேர்க்கும் வகையில் கிராமம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; “கோவை மாவட்டத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அனைருக்கும் ஆதார் அட்டை எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படாத பயனாளிகளை சேர்க்கும் வகையில் கிராமம் வாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி, காப்பீட்டுத் திட்டத்துடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது நடைபெறுகிறது.

பயனாளிகள் குடும்ப அட்டை, காப்பீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்கள் கிராமத்தில் நடைபெறும் இணைப்பு முகாமில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு முகாம் நடைபெறும் நாள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மூலமாக முன்னறிவிப்பு செய்யப்படும்.

அந்தந்த பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க