• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் வைத்து நூதன போராட்டம்

September 8, 2020 தண்டோரா குழு

கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தி.மு.க இளைஞரணியினர் கோசங்கள் எழுப்பினர்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி, தி.மு.க.இளைஞரணி-மாணவரணி இணைந்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக,கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் தி.மு.க இளைஞரணி கோவை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திமுக இளைஞரணி சார்பில் நூதன முறையில் நடைபெற்றது. இதில் மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியும் மேலும் , நீட் தேர்வை ரத்து செய்ய கோரி புறா காலில் கோரிக்கை மனுவை கட்டி மத்திய அரசுக்கு அனுப்புவது போல பறக்க விட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரிய கடைவீதி பகுதி மாணவரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் PJ யாசர்,CMS இஸ்மாயில்,லேனா தன்ஜில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க