கோவை மாவட்டம் சூலூர் அருகே மது அருந்த பணம் தராத மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூலூர் அருகே உள்ள அரசூர் பல்லவாநகரைச் சேர்ந்த நாகராஜ் (52) என்பவர்,மது அடிமை.நேற்று முன்தினம், மது அருந்த பணம் கேட்டபோது மனைவி சுவேதா (38) மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில், கோபம் அடைந்த நாகராஜ், சுவேதாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த கத்தியால் சுவேதாவின் இடது கை மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுவேதா, அலறித் துடித்தார்.
சுவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, காயமடைந்த சுவேதாவை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுவேதா, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், நாகராஜை கைது செய்து, அவரிடமிருந்து கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்தனர்.மது அடிமை கணவரின் கொடூர செயலால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு