• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மகளை கவனிக்காத மருமகனை அடித்து துவைத்த மாமனார்

July 19, 2018 தண்டோரா குழு

கோவையில் தனது மகளை விட்டு பிரிந்த மருமகன் மீண்டும்வந்து தொந்தரவு செய்வதாக கூறிமாமனார்மருமகனை பொதுமக்கள் மத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து துவைத்தார்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகள் சாந்தினி கடந்த 10 வருடத்திற்கு முன்பு பழனிசாமி என்பவரை திருமணம் செய்து உள்ளார். ஆனால் பழனிசாமி, மனைவியையும், 3 மாதக் குழந்தையை விட்டு விட்டு சென்று உள்ளார். இதனை அடுத்து சாந்தினி காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென பழனிசாமி அந்த கடைக்கு வந்து தகராறு செய்து உள்ளார். இதைப்பார்த்து கொண்டு இருந்த சாந்தினியின் அப்பா, பழனிசாமியை அடித்து உதைத்து கை கால்களை கட்டி வைத்து உள்ளார். பல வருடங்களாக மனைவியை கவனிக்காமல் இருந்த பழனிச்சாமி தற்போது, தொடர்ந்து தனது மகளை தொந்தரவு செய்வதாகவும், இதனால் அடித்ததாக அவரது மாமனார் தெரிவித்து உள்ளார்.ஆனால் தங்களை மாமனார் வாழவிடாமல் தடுப்பதாக பழனிச்சாமி கூறியுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட மாமனார், மருமகனை அடித்ததை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் காவல்துறையினர் பழனிச்சாமியிடமும், தர்மராஜ் மற்றும் சாந்தினியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க