• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போலீசார் அதிரடி சோதனையில் 801 மதுபாட்டில்கள் பறிமுதல்

January 17, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் நேற்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.இதை அடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 230க்கும் மேற்பட்ட டாஸ்மாக் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

இதனை அடுத்து மது விற்பனையில் யாரேனும் ஈடுபடுகிறார்களா? என கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 269 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே போல் பேரூரில் 4 வழக்குள் 51 மது பாட்டில்கள், கே.எம்.பட்டியில் 12 வழக்குகள் 81 மது பாட்டில்கள்,பொள்ளாச்சியில் 15 வழக்குகள், 217 மது பாட்டில்கள்,வால்பாறையில் 8 வழக்குகள் 92 மதுபாட்டில்கள், மேட்டுப்பாளையத்தில் 10 வழக்குகள் 91 மது பாட்டில் என மொத்தம் 62 வழக்குகளில் 801 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க