• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் மற்றும் சிறுவன் கைது

October 2, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் வந்த நிலையில், வாகன திருட்டில் ஈடுபட்ட ஒரு வாலிபர் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

தொடர் திருட்டால், தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுவன் மற்றும் வாலிபர் ஒருவர், அரசு மருத்துவமனையில் இருந்து இரு சக்கர வாகனம் ஒன்றை தள்ளிக் கொண்டு சென்றதை பார்த்துள்ளனர்.அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார்,அவர்களை விசாரிக்க அழைத்த போது,இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.இதையடுத்து, அவர்களை விரட்டி பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஒருவரின் பெயர் குகன் (22) பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இவர், எல்.ஐ.சி பகுதியில் நிறுத்தி வைக்கபட்டு இருந்த இரு சக்கர வாகனத் திருட்டிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.மற்றொருவரான சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரிடம் இருந்தும் திருடப்பட்ட இரு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க