• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு

December 12, 2019

வடவள்ளி- மருதமலை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மருதமலை செல்லும் சாலையில் நள்ளிரவில் பைக் ரேஸ்சில் வாலிபர்கள் ஈடுபடுவதாக வடவள்ளி போலீசாருக்கு புகார் கிடைத்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். நேற்று இரவு வடவள்ளி- மருதமலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். நள்ளிரவு 11:45 மணிக்கு அங்கு ஐ.ஒ.பி காலனி அருகே போலீசார் சென்ற போது 11 மோட்டார் சைக்கிள்களில் 21 பேர் போட்டி போட்டு கொண்டு அதிவேகமாக சென்றனர். போலீசார் அவர்களை நிறுத்தும்படி கூறினார்கள். ஆனால் 21 பேரும் அதிவேகத்தில் நிற்காமல் சென்றனர்.

சற்று நேரத்தில் 2 குதிரை வண்டிகளும் வேகமாக சென்றது. மோட்டார் சைக்கிளில் சென்ற 21 பேரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் பைக்ரேசில் ஈடுபட்டது தெரிய வந்தது.அவர்கள் சென்ற 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 குதிரை வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 21 பேர் மீதும் சந்தேக வழக்கு பதிவு செய்து பின்னர் எச்சரித்து விடுவித்தனர்.

மேலும் படிக்க