• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பேருந்து இயக்கம் நிறுத்தம் வெறிசொடிய பேருந்து நிலையங்கள்

July 1, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவையில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்பட வில்லை. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஏற்கனவே கோவையில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே பொது போக்குவரத்து இயக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்தும் நிறுத்தப்பட்டதால், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது போக்குவத்து நிறுத்தம் தொடர்பான தகவல் தெரியாமல் காலையில் பொதுமக்கள் சிலர் வழக்கம்போல பேருந்து நிலையத்திற்கு வந்த பின்னரே அவர்களுக்கு பேருந்துகள் இயங்காது என்பது தெரியவந்தது.

மேலும் படிக்க