July 6, 2018
தண்டோரா குழு
கோவையில் பேக்கரி பொருட்கள் கண்காட்சி இன்று துவங்கியுள்ளது.கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று வித்யாசமான பேக்கரி பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.
இந்தியாவில்,குறிப்பாக தென் மாநிலங்களில் ரொட்டி,பிஸ்கட்,கேக் உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரிக்கும் பேக்கரி துறை,சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.இதையடுத்து,கோவையில் பேக்கரி துறை தொடர்பான கண்காட்சி,இன்று துவங்கி உள்ளது.
பேக்கரி துறையில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக இக்கண்காட்சி அமைந்து உள்ளது.இதற்காக பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் நவீன கருவிகள், பேக்கரி உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் தமிழகம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பேக்கரி துறையை சேர்ந்த, 10 ஆயிரம் பேர் பங்கேரு உள்ளனர்.மேலும்,பேக்கரி துறையில் காணப்படும் சவால்,அரசு செய்ய வேண்டிய உதவிகள் உள்ளிட்டவை குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட உள்ளது.
இதில், உயர்தரமான பேக்கரி பொருட்களான இனிப்பு மற்றும் கார வகையில்,நொறுக்கு திண்பண்டங்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.பேக்கரி இயந்திரங்கள்,உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளதால்,பேக்கரி பொருட்களின் தயாரிப்பாளர்கள்,விற்பனையாளர்கள் நேரடியாக சந்தித்து பல புதிய தொழில்நுட்ப கருவிகளை பார்த்து தங்களுக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ளும் மேடையாக இந்த கண்காட்சி அமைந்து உள்ளது.
மேலும்,உணவு பதப்படுத்துதல்,சிறு தொழில் வணிகம் செய்பவர்களுக்கு,பயன் உள்ளதாகவும் கண்காட்சி உள்ளது.மூன்று நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.70க்கும் மேற்பட்ட பேக்கரி மற்றும் உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அரங்குகள்,பேக்கரி உணவு சேவை,மூலப்பொருட்கள், சுவையூட்டும் பொருட்கள்,சாக்லேட் மற்றும் நவீன இயந்திரங்கள் சம்பந்தமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல்,பல புதிய பொருட்களின் அறிமுகமும் நடைபெற உள்ளது.தென்னிந்தியாவில் பேக்கரி மற்றும் உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள்,விநியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தித்து,தொழில் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை இந்த கண்காட்சியில் பகிர்ந்து கொள்ளலாம்.ஏராளமான பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு செல்கின்றனர்.